Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.186.94 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவனமானது, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டது.
காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். இந்நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மேயர் பிரியா ராஜன் இன்று (நவ 12) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
ரூ. 180 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வடசென்னை பகுதிகளில் 11 சமுதாய நலக்கூட கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் சமுதாய திறந்து வைக்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு வருகிற 15-ம் தேதி உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். இது தூய்மை பணியாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த முறையை விட இந்த முறை மழை குறைவாகவே பெய்துள்ளது.
மாநகராட்சி சார்பில் ஆக்ஸ்ட் மாதம் முதலே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மழை வரக்கூடிய சூழலை பார்த்துக்கொண்ட பின் தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b