Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 10-ஆம் தேதி கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள் மற்றும் இனிகோ நகர் நாட்டுப்படகு மீனவர்கள் இடையே கடலுக்குள் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இரவு கரைதிரும்பிய விசைப்படகில் நுழைந்து இனிகோ நகர் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகு தொழிலாளியான திரேஸ்புரம் தொம்மை ஜேசு மகன் கனிஷ்டன் சிலுவையார் (35) என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் மீனவரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில், இன்று(நவ 12) 2வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b