சென்னை மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்- வரும் 15 ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
சென்னை, 12 நவம்பர் (ஹி.ச) சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவனம் ஒப்ப
Corp


சென்னை, 12 நவம்பர் (ஹி.ச)

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஓராண்டுக்கு தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்க ரூ.64.73 கோடி செலவிடப்படவுள்ளது, அதன்படி மாநகராட்சியில் 31,373 தூய்மைப் பணியாளா்கள் பயனடையவுள்ளனா்.

அவா்களுக்கு காலை, மதியம், இரவு நேரங்களில் வழங்கப்படவுள்ள உணவு பட்டியலும் மாநகராட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

வரும் நவ 15 ஆம் தேதி கலைவாணா் அரங்கில் நடைபெறவுள்ள விழாவில், இலவச உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ