Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)
பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது பெற உள்ள திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது ,
கற்பனைகளைக் காட்சிகளாக கண் முன் நிறுத்தும் வியக்க வைக்கும் கலை இயக்குநர் தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன்.
Oxford பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் திறந்து வைத்த தந்தை பெரியாரின் திருஉருவப்படத்தை தோட்டா தரணி சார் மிகச்சிறப்பாக உருவாக்கி இருந்தார்கள்.
கடல் கடந்தும் கலைத்திறனால் உயர்ந்து நிற்கும் தோட்டா தரணி சாருக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ