போடி தொகுதியை கைப்பற்றும் முதல்வரின் கனவு பலிக்காது -ஓபிஎஸ்
பெரியகுளம், 14 நவம்பர் (ஹி.ச.) பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு:
Ops


பெரியகுளம், 14 நவம்பர் (ஹி.ச.)

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

பீகார் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு:

ஜனநாயக கட்சியை கூட்டணி தான் வெற்றி பெறும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. அது நடந்திருக்கிறது.

மேகதாது அணை குறித்த கேள்விக்கு:

மேகதாது அணையை பற்றி விரிவான அறிக்கையை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

தமிழக அரசு தனியாக தீவிரமாக ஆய்வு செய்யவில்லை.

போடி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என முதல்வர் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு:

அவர்களின் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்,

Hindusthan Samachar / Durai.J