Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 14 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நாளை (நவ 15) நடத்தப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுவை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் வெப்ப அலை வீசியது. அதன் காரணமாக ஏப்ரல் 28, 29 மற்றும் 30ம் தேதி ஆகிய மூன்று தினங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடு செய்ய கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 30ம் தேதிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயக்கப்பட்டது.
ஏப்ரல் 30ம் தேதி விடுப்பை ஈடு செய்ய நாளை 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக பள்ளிக் கல்வித்துறை சார்பில், அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை 15ம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியை சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். அதனால், நாளை 15ம் தேதி விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனையேற்று, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக வரும் ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, புதன்கிழமை கால அட்டவணைப்படி வகுப்பகள் நடைபெறும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b