Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 14 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம்
கீழ்பென்னாத்தூர் அடுத்த எரும்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40), கூலி தொழிலாளி, இவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 வயதுடைய சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து உள்ளது.
பின்னர் சிறுமியின் தாய் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவக்குமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிவக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN