Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீஹரிகோட்டா, 2 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘பாகுபலி' என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம். - எம்5’ ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இதில், 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்' என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03' என்ற கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்கும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது.
தொடர்ந்து செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்ப்பதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5.26 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
24 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று மாலை ராக்கெட் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
Hindusthan Samachar / JANAKI RAM