Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 9 டிசம்பர் (ஹி.ச.)
20 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி தற்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இத்தாலியின் லூசியானா நகரில் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்த சோனினியா காந்தி இன்று (டிச 09) தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (டிச 09) வெளியிட்ட எக்ஸ் பதிவில், சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் உடல் நலத்துடன் நீண்டகாலம் வாழ பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b