ஹைதராபாத்தில் வழக்கறிஞர் மீது தாக்குதல் - உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
தெலங்கானா, 23 மே (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மசாப் டேங்க் பகுதியில், நாம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்கறிஞர் மொஹியுதீன் என்பவர் தனது காரில் ஏறும் போது, அடையாளம் தெரியாத நபர்கள் மற்றொரு வாகனத்தில் அதிவேகமாக மோதியதாக
தாக்குதல்


தெலங்கானா, 23 மே (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம்

ஹைதராபாத்தின் மசாப் டேங்க் பகுதியில், நாம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்கறிஞர் மொஹியுதீன் என்பவர் தனது காரில் ஏறும் போது, அடையாளம் தெரியாத நபர்கள் மற்றொரு வாகனத்தில் அதிவேகமாக மோதியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு அந்த நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காயமடைந்த வழக்கறிஞரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர் மொஹியுதீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறியும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P