Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 மே (ஹி.ச.)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் தொடர்ச்சியான உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அரசு சாமானிய மக்களின் மீது பெரும் பொருளாதாரச் சுமையை சுமத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல் விலை 94 காசுகளும், டீசல் விலை 95 காசுகளும் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ளது.
அந்தப் பதிவில்,
பிரதமர் மோடிக்கு பொதுமக்களின் நலனை விட, பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களின் லாபமே முக்கியமாக உள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உலக நாடுகள் தங்களது குடிமக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வரும் நிலையில், மோடி அரசு தனது சொந்த மக்களையே சுரண்டி வருவதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், ஒருமுறையாவது சாமானிய மக்களின் நலனைப் பற்றி சிந்தியுங்கள்.
எவ்வளவு காலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படப் போகிறீர்கள்? என்று மத்திய அரசை நோக்கி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P