அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் எம்.பி. வேணுகோபால்
சென்னை, 24 மே (ஹி.ச.) அதிமுகவில் இருந்து முன்னாள் மக்களவை உறுப்பினரும், அக்கட்சியின் மருத்துவர் அணி செயலாளருமான வேணுகோபால் விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டு முறை திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவ
வேணு


சென்னை, 24 மே (ஹி.ச.)

அதிமுகவில் இருந்து முன்னாள் மக்களவை உறுப்பினரும், அக்கட்சியின் மருத்துவர் அணி செயலாளருமான வேணுகோபால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு முறை திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2017ஆம் ஆண்டு அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விலகல் தொடர்பான அறிக்கையில், தற்போதைய அதிமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து வேணுகோபால் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்து செல்லும் மனப்பான்மையில் இல்லை என்றும், இதனால் கட்சிக்குள் பல்வேறு தரப்பினரிடையே ஏமாற்றம் நிலவுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பட்டியல் சமூக மக்களிடம் அதிமுக தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும், கட்சியின் அரசியல் அணுகுமுறையால் அந்த சமூக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் வேணுகோபால் கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் தலைமையையும் அவர் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இருமுறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக செயல்பட்ட வேணுகோபாலின் இந்த விலகல், கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P