உத்தரகாண்டில் 14 ஹெக்டேர் வனப்பகுதியை சூறையாடிய பெரும் காட்டுத்தீ
டேராடூன், 24 மே (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் புதோகி கிராம வனப்பகுதியில் நேற்று இரவு பெரும் காட்டுத்தீ பரவியதில் சுமார் 14 ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட தலைமையகத்துக்கு அருகே தீ
உத்தரகாண்டில்  14 ஹெக்டேர் வனப்பகுதியை சூறையாடிய பெரும் காட்டுத்தீ


டேராடூன், 24 மே (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் புதோகி கிராம வனப்பகுதியில் நேற்று இரவு பெரும் காட்டுத்தீ பரவியதில் சுமார் 14 ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட தலைமையகத்துக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் உடனடியாக தீயணைப்புக் குழுக்களை அனுப்பி தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக வனத்துறை கூறியது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தெஹ்ரி கோட்ட வன அலுவலர் புனீத் தோமர் கூறுகையில்,

தீ விபத்து இரவு நேரத்தில் ஏற்பட்டது. எங்கள் குழுவினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ கிட்டத்தட்ட கட்டுக்குள் வந்துவிட்டது.

மக்கள் வசிக்காத பகுதியை நோக்கி தீ கீழ்நோக்கி பரவியுள்ளது. ஒட்டுமொத்தமாக, சுமார் 14 ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

தீ மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து விலகி மலையடிவாரத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், உள்ளூர் மக்களுக்கு ஆபத்து குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். தீயை முழுமையாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b