தரங்கம்பாடி அருகே கோர விபத்து - கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பரிதாப பலி
தரங்கம்பாடி, 09 ஜூன் (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இன்று நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்
Horrific accident near Tharangambadi


தரங்கம்பாடி, 09 ஜூன் (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இன்று நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த விஷ்வா, வயது 20, மற்றும் ராகுல், வயது 21, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் விஷ்வா தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரங்கம்பாடி காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் வயதில் இரு உயிர்கள் பலியான சம்பவம் வெள்ளக்கோவில் மற்றும் தரங்கம்பாடி பகுதி மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b