சைபர் பாது​காப்பு காரணங்​களுக்​காக சஞ்​சார் சாத்தி செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் - ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு உத்தரவு
புதுடெல்லி, 2 டிசம்பர் (ஹி.ச.) சைபர் பாது​காப்பு காரணங்​களுக்​காக சஞ்​சார் சாத்தி செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் என்று ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இது குறித்து ராய்ட்​டர்ஸ் நிற
சைபர் பாது​காப்பு காரணங்​களுக்​காக சஞ்​சார் சாத்தி செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் - ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு உத்தரவு


புதுடெல்லி, 2 டிசம்பர் (ஹி.ச.)

சைபர் பாது​காப்பு காரணங்​களுக்​காக சஞ்​சார்

சாத்தி செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் என்று ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு

உத்​தர​விட்​டுள்​ளது.

இது குறித்து ராய்ட்​டர்ஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில்

தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது:

உலகின் மிகப்​பெரிய தொலைத்​தொடர்பு

சந்​தைகளில் ஒன்​றாக இந்​தியா உள்​ளது. இங்கு மட்​டும் 120 கோடி சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். இந்த நிலை​யில், சைபர் பாது​காப்​புக்​காக

மத்​திய அரசு பிரத்​தேயக​மாக உரு​வாக்​கி​யுள்ள

சஞ்​சார் சாத்தி செயலியை புதிய போன்​களில் நிறு​விய பிறகே விற்​பனைக்கு அனுப்ப வேண்​டும். இதனை முன்​னணி ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​கள் 90

நாட்​களுக்​குள் உறுதி செய்ய வேண்​டும் என்று மத்​திய அரசின் உத்​தர​வில்

தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சஞ்​சார் சாத்தி செயலி கடந்த ஜனவரி​யில்

அறி​முகம் செய்​யப்​பட்​டது. அன்​றி​லிருந்து இன்று வரை சுமார் 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட தொலைந்துபோன செல்போன்​களை இந்த செயலி கண்​டு​பிடிக்க உதவி​யுள்​ளது.அக்​டோபரில் மட்​டும் இந்த செயலி உதவி​யுடன் 50,000 ஸ்மார்ட்​போன்​கள்

மீட்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு ராய்​ட்டர்ஸ்

செய்​தி​யில்

கூறப்​பட்​டுள்​ளது.

சஞ்​சார் சாத்தி இந்​திய தொலைத்​தொடர்​புத் துறை​யின் முயற்​சி​யாகும். இது குடிமக்​களுக்கு செல்போன் பாது​காப்பு மற்​றும் விழிப்​புணர்வை மேம்​படுத்த ஒரு வெப் போர்ட்​டல் மற்​றும் செல்போன் செயலியை வழங்​கு​கிறது.

இது பயனர்​கள் தொலைந்து போன அல்​லது திருடப்​பட்ட தொலைபேசிகள் குறித்து புகாரளிக்​க​வும், மோசடிகளை தடுக்​க​வும், அரசு தொடர்​பான பிற குடிமக்​கள் சேவை​களை அணுக​வும் அனு​ம​திக்​கிறது.

மோசடி எதிர்ப்பு செல்போன் செயலியை உரு​வாக்​கு​வது தொடர்​பாக ஆப்​பிள் நிறு​வனம் ஏற்​கெனவே தொலைத்​தொடர்பு ஒழுங்​கு​முறை ஆணை​யத்​துடன் மோதல் போக்கை கடைபிடித்து வரு​கிறது.

இந்​த நிலை​யில், மத்​திய அரசு பிறப்​பித்​துள்ள இந்த புதிய உத்​தரவை சாம்​சங், விவோ, ஓப்​போ, ஷாவ்மி நிறு​வனங்​களு​டன் சேர்ந்து ஆப்​பிளும் பின்​பற்ற

வேண்​டிய கட்​டா​யம்​

ஏற்​பட்​டுள்​ளது.

Hindusthan Samachar / JANAKI RAM