இன்று பள்ளி மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.) அரசு பள்ளி மாணவர்கள் உதவி தொகை பெறும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று (அக் 11) நடைபெறும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வை 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பள்ளி மாணவர்கள் எழுதுகின்றனர். இது குறித்து அரசுத் தேர்வுகள
இன்று பள்ளி மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு


சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)

அரசு பள்ளி மாணவர்கள் உதவி தொகை பெறும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று (அக் 11) நடைபெறும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வை 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பள்ளி மாணவர்கள் எழுதுகின்றனர்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு இந்த தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றது. இன்று (அக் 11) காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி அளவில் முடியும். இதற்காக 950 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேர் இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். மேற்கண்ட தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று முதன்மை மதிப்பெண்கள் பெறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் வழியாக மாதந்தோறும் ரூ.1500 என இரண்டு வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b