சைனிக் பள்ளிகளில் சேர வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு
புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.) இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் எஸ்.எஸ்.எஸ்., எனும் ''சைனிக் ஸ்கூல்ஸ் சொசைட்டி'', சைனிக் பள்ளிகளை நடத்துகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நேஷனல்
சைனிக் பள்ளிகளில் சேர வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு


புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.)

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் எஸ்.எஸ்.எஸ்., எனும் 'சைனிக் ஸ்கூல்ஸ் சொசைட்டி', சைனிக் பள்ளிகளை நடத்துகின்றன.

இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நேஷனல் டிபன்ஸ் அகாடமி -என்.டி.ஏ., இந்தியன் நேவல் அகாடமி - ஐ.என்.ஏ., மற்றும் இதர பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

சைனிக் பள்ளிகளில் ஆறாம் மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இந்தியா முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 6, 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

2026-27ம் கல்வியாண்டுக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. https://exams.nta.nic.in/sainik-school-society/ என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.700-ம், இதர பிரிவினர் ரூ.850-ம் இணையவழியில் அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங் களை www.nta.ac.in இணையதளத்தில் அறியலாம்.

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி மூலமாக அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b