'ஆபரேஷன் லங்கடா' என்​க​வுன்ட்​டரில் 10 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
லக்னோ, 14 அக்டோபர் (ஹி.ச.) உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுப்பதற்காக ‘ஆபரேஷன் லங்​க​டா’ எனும் பெயரில் முக்​கிய குற்​ற​வாளி​களை பிடிக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில் கடந்த 10 நாட்​களில் நடை​பெற்ற 20
'ஆபரேஷன் லங்கடா' என்​க​வுன்ட்​டரில் 10 குற்றவாளிகள் சுட்டுக்கொலை


லக்னோ, 14 அக்டோபர் (ஹி.ச.)

உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுப்பதற்காக ‘ஆபரேஷன் லங்​க​டா’ எனும் பெயரில் முக்​கிய

குற்​ற​வாளி​களை பிடிக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது.

இந்​நிலை​யில் கடந்த 10 நாட்​களில் நடை​பெற்ற 20 என்​க​வுன்ட்​டர்​களில் 10 முக்​கிய குற்​ற​வாளி​கள்

கொல்​லப்​பட்​டுள்​ளனர்.

கொல்​லப்​பட்​ட​வர் பட்​டியலில் ரூ.2.5 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட வினீத் பாட்​டி, ரூ.1 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட இப்​த​கார், இம்​ரான், அர்ஷத், நயீம் ஆகியோ​ரும் உள்​ளனர். பாலியல் வன்கொடுமை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பலரை அம்மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆண்​டு​களில் உ.பி. காவல்​துறை 14,973 என்​க​வுன்ட்​டர்​களை நடத்​தி​யுள்​ளது. இதில் 239 பேர்

கொல்​லப்​பட்​டுள்​ளனர்.

உ.பி.​யின் கவு​சாம்பி மாவட்​டத்​தில் 3 நாட்​களுக்கு முன் புது​மணப் பெண் ஒரு​வர் கழுத்து அறுத்து கொல்​லப்​பட்​டார். இந்த கொடூர சம்​பவத்​தில் 48 மணி நேரத்​தில் அவரது காதலன் பால்​வீர் காலில் சுடப்​பட்டு கைது செய்​யப்​பட்​டார்.

ராபர்ட்​ஸ்​கஞ்ச் மாவட்​டத்​தில் கடந்த 8-ம் தேதி ஒரு

பெண்​ணிடம்

கொள்​ளை​யடித்து அவரை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக 3 பேர் மீது

குற்​றம் சாட்​டப்​பட்​டது.

மறு​நாள் இந்த மூவரும்

என்​க​வுன்ட்​டரில் கைது

செய்​யப்​பட்​டனர்.

பரேலி​யில் ரூ.1 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட காஸ்​கஞ்​சின் இப்​த​கார், கடந்த 8-ம் தேதி

என்​

க​வுன்ட்​டரில்

கொல்​லப்​பட்​டார்.

இவர்களது மரணம்

குற்​ற​வாளி​கள் மத்​தி​யில்

அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

Hindusthan Samachar / vidya.b