6 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் - இரண்டு வாலிபர்கள் போக்சோ வழக்கில் கைது
விழுப்புரம், 14 அக்டோபர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மரக்காணம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்து வரும் ஆறு வயது சிறுமியை இரண்டும் வாலிபர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
Child Harassment


விழுப்புரம், 14 அக்டோபர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மரக்காணம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்து வரும் ஆறு வயது சிறுமியை இரண்டும் வாலிபர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தனது பெற்றோரிடம், அந்த சிறுமி கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பாலியல் சீன்டலில் ஈடுபட்டது மரக்காணம் வட்டம் எக்கியார் குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த ரஞ்சித் மகன் ராகவன் (21) மற்றும் அவரது தம்பி கிரி (19) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் மரக்காணம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொலை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN