Enter your Email Address to subscribe to our newsletters
மயிலாடுதுறை, 14 அக்டோபர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (65). இவரது மனைவி செல்வபதி (50).
இருவரும் டூவீலரில் இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக சீர்காழியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். வழியில் வழுதலைக்குடி என்ற இடத்தில் எதிரே அதிவேகமாக வந்த தனியார் பஸ் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது சாலையோரம் வந்த டூவீலர் மீது மோதியது.
இந்த விபத்தில் டூவீலரில் வந்த செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயர்ந்தார். தூக்கி வீசப்பட்ட செல்வபதி சாலையோரம் உள்ள வாய்க்காலில் விழுந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து செல்வபதியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் வர தாமதமானதால் இறந்த செல்வத்தின் உடல் நீண்ட நேரம் சாலையிலேயே கிடந்தது.
பின்னர் தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN