இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கி வழி நடத்துவது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது - சுப்மன் கில்
புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.) வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ப
இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கி வழி நடத்துவது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது - சுப்மன் கில்


புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி புதுடெல்லியில் நடந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய பின் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கி வழி நடத்துவது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. இந்த தொடரில் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமான நேரங்களில் சரியான முடிவுகளை இந்த இரண்டு போட்டிகளிலும் எடுத்ததாக நினைக்கிறேன். சில சமயங்களில் தைரியமான முடிவுகள் போட்டியின் முடிவுகளை மாற்றும்.

அந்த வகையில் இந்த தொடரில் முக்கிய சில முடிவுகளை எடுத்ததாக கருதுகிறேன். இந்த போட்டியை பொருத்தவரை 300 ரன்கள் வரை நாங்கள் முன்னிலை பெற்றதால் எங்களால் எளிதாக வெல்ல முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM