அக் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.) இந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி ஆண்டுதோறும் இந்தியாவின் அணைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளி திருநாளன்று புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மக
அக் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி


புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.)

இந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி ஆண்டுதோறும் இந்தியாவின் அணைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளி திருநாளன்று புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும் விற்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதி வழங்கியது.

பசுமை பட்டாசுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

அனுமதிக்கப்பட்ட 4 நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

பசுமை பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது குறைந்துள்ளதால் அவ்வகை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி என்.சி.ஆர். பகுதியில் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை. பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும்.

பசுமை பட்டாசு உற்பத்தியை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பசுமை பட்டாசுகளுக்கான க்யூஆர் கோடுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

போலி பட்டாசுகள் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்துசெய்யப்படும்

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b