ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் தேசப்பற்றை போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினம் அக்டோபர் 15 ஆம் தேதி சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக் 15 ) அவரது பிறந்த நாளை முன்னிட்டு
ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் தேசப்பற்றை போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினம் அக்டோபர் 15 ஆம் தேதி சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று

(அக் 15 ) அவரது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்களுக்கும், சமுக ஆர்வலர்களும் அவரை நினைவு கூர்ந்து மரியாதை செய்து வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கவும், தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஏவுகணை நாயகர் குடியரசு முன்னாள் தலைவர் பாரத ரத்னா திரு ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அவர்களின் பிறந்த தினம் இன்று.

கனவு காணுங்கள் என இந்திய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்ததோடு, எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தன் திறமையால் ஏற்றம் பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து நாட்டு மக்களின் இதயங்களில் சிகரமாகக் குடியிருக்கும் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் தேசப்பற்றையும், தேசத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b