Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 15 அக்டோபர் (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் அருணாசலேஸ்வரர் வழிபட்டு 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு கிரிவலப் பாதையில் உள்ள சாலையின் இரு புறங்களிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புளியமரம் குடை போன்று வளர்ந்து நிழல் கொடுத்து வந்த நிலையில் இன்று நெடுஞ்சாலைத்துறையினர் புளிய மரத்தை அடியோடு சாய்த்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை ஆண்டு காலமாக நிழலை கொடுக்கக்கூடிய புளிய மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் பொது மக்களுக்கும் கிரிவலம் வரும் ஆன்மீக பக்தர்களுக்கும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிழலை கொடுத்து வந்த புளிய மரத்தை வெட்டி அகற்றிய சம்பவம் பொது மக்களிடையும் ஆன்மீக பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN