Enter your Email Address to subscribe to our newsletters
ராமநாதபுரம், 16 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் நத்தை குளம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் இன்று
(அக்டோபர் 16 ஆம் தேதி) அதிகாலையில் க்யூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் நத்தக்குளம் கடற்கரைப் பகுதியை கண்காணித்து வந்தனர்.
அப்போது கடற்கரையில் இருந்து படகில் பொருள்களை ஏற்றிக்கொண்டு இருந்தவர்கள், போலீசாரை கண்டவுடன் படகுடன் கடலுக்குள் தப்பிச்சென்றனர்.
இந்த நிலையில் கடற்கரையில் இருந்த இரண்டு பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கடற்கரையிலிருந்து படகில் ஏற்றப்பட்ட 38 மூடைகளை கைப்பற்றியுள்ளனர்
அந்த மூடைகளில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் நேச்சர் பவர் சோப் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும், அவற்றை கைப்பற்றியதாகவும் க்யூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN