வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா
திருமலை, 16 அக்டோபர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகிறது. அத
வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா


திருமலை, 16 அக்டோபர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.

அதையொட்டி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகிறது. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறையை தொடர்ந்தனர்.

இது ஆகம சாஸ்திரபடி விரோதமானது என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த நடவடிக்கையை தேவஸ்தானம் எடுத்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM