Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 17 அக்டோபர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நட்சத்திர விடுதிகள் மட்டுமின்றி சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள ஆங்கில வழி தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனை செய்யும் போலீசார் பள்ளிக்கு விரைந்தனர்.
பள்ளியின் முகப்பு பகுதியிலிருந்து பள்ளி வகுப்பறைகள்,மாணவ மாணவிகள் தங்கும் அறைகள்,மற்றும் பள்ளியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்ததையடுத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் நிம்மதியடைந்தனர்.
மேலும் மின்னஞ்சல் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு விடுத்தவர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN