திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி, 17 அக்டோபர் (ஹி.ச.) திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் க
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு


தூத்துக்குடி, 17 அக்டோபர் (ஹி.ச.)

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 2025-ம் ஆண்டு 22.10.2025 முதல் 2.11.2025 வரை நடைபெறுவதை முன்னிட்டு அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்

அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

அன்னதானம் வழங்க விரும்புவோர் தூத்துக்குடி இணை இயக்குநர், வேளாண்மைத்துறை கட்டிடம், தரைதளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளத்தில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச்சான்றிதல் பெற வேண்டும். அதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர்கள் தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்பிக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அன்னதானம் மட்டுமே அளிக்க வேண்டும. அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும்.

அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. கோவில் வளாகப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகப் பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும்.

நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்ககூடாது.

வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு அன்னதானம் வழங்ககூடாது.

உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும்.

அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கிட இயலாது.

மேலும் போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு 0461-2900669 என்ற எண்ணிலும், வாட்ஸ்அப் மூலம் 9444042322 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b