டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் - சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஒடென்ஸ், 18 அக்டோபர் (ஹி.ச.) டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை, முகமது ரியான் அர்டிய
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் - சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்


ஒடென்ஸ், 18 அக்டோபர் (ஹி.ச.)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை, முகமது ரியான் அர்டியான்டோ- ரஹ்மத் ஹிதாயத் (இந்தோனேசியா) ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேசியா ஜோடியை வீழ்த்தி சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 9-21, 14-21 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லேனியரிடம் (பிரான்ஸ்) தோல்வியை கண்டார்.

Hindusthan Samachar / JANAKI RAM