திமுக நிர்வாகிகளுக்கு வருகிற அக். 28 ஆம் தேதி தேர்தல் பயிற்சி கூட்டம் - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக நிர்வாகிகளுக்கு வருகிற அக். 28 ஆம் தேதி தேர்தல் பயிற்சி கூட்டம் நடக்கவிருப்பதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அற
Tweet


சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக நிர்வாகிகளுக்கு வருகிற அக். 28 ஆம் தேதி தேர்தல் பயிற்சி கூட்டம் நடக்கவிருப்பதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திமுக தலைவர் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கட்சி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட மத்திய பாஜக அரசின் முன்பு தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரையை திமுக தொடங்கவுள்ளது.

அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர், திமுக தலைவர் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்புக்காக கழக மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை காலை 9 மணி அளவில் மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ