சென்னை - பெங்களூரு ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு - பயணிகள் அவதி
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. 109 பேர் பயணம் செய்யவிருந்த இந்த விமானத்தின் விமானி கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இதனால் விமானம் நிறுத்தப்பட்டது.
சென்னை - பெங்களூரு ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு - பயணிகள் அவதி


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. 109 பேர் பயணம் செய்யவிருந்த இந்த விமானத்தின் விமானி கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இதனால் விமானம் நிறுத்தப்பட்டது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் சரி செய்த பிறகு சென்னையில் இருந்து விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானம் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

விமானத்தில் அண்மைகாலமாக, விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அக் 17ம் தேதி, இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், தீபாவளிக்கு சொந்த ஊர் வர இருந்த இந்திய பயணிகள் கடும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b