Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச)
சென்னை போயஸ்கார்டன் பின்னி சாலை, பகுதியில் உள்ள இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி அலுவலகத்துக்கு மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து
தேனாம் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் சோதனையில் புரளி என தெரியவந்தது.
இரு தினங்களுக்கு முன் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ