பாதுகாப்பான முறையில் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் - காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்
தூத்துக்குடி, 19 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கோபுரங்கள், சி.சி.டி.வி கேமராக்கள், 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள், ட்ரோன் கேமரா பாதுகாப்பு ஆகியவற்றை மாவட்ட கா
தூத்துக்குடி


தூத்துக்குடி, 19 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கோபுரங்கள், சி.சி.டி.வி கேமராக்கள், 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள், ட்ரோன் கேமரா பாதுகாப்பு ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்து பாதுகாப்பான முறையில் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திர ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்ரவின்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் குற்ற செயல்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டும் தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய முக்கிய இடங்களான தென்பாகம் காவல் நிலையம் முன்பாக உள்ள சின்னத்துரை & கோ சந்திப்பு, ஜின் பேக்டரி ரோடு சந்திப்பு, கண்ணா சில்க் அருகே மற்றும் WGC ரோடு அழகர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 360 டிகிரி கண்காணிக்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள 2 ரோந்து வாகனங்கள் மூலமும் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய முக்கிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டும் மற்றும் கண்காணித்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களிடமிருந்து பொதுமக்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்து கொள்ளும் பொருட்டும் அவ்வப்போது ஒலிப்பெருக்கியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி நகர உட்கோட்ட எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட மொத்தம் 686 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு அவை நேரடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பு திரை மூலம் கண்காணிக்கப்படும், மேலும் இரவு நேரங்களிலும் துல்லியமாக பார்க்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுதல், அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்றவற்றை தவீர்த்து தீபாவளி திருநாளை பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி திருநாளாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மேலும் பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நேர விதிமுறைகளின் படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் வீட்டில் பாதுகாப்பான முறையில் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமலும், குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கூரை வீடுகள், பட்டாசு விற்பனை கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பட்டாசை வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / Durai.J