7- வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு
சேலம், 20 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு


சேலம், 20 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், இந்தாண்டில் மட்டும் 7வது முறையாக அணை நிரம்பியது. விநாடிக்கு 10,374 கனஅடியில் இருந்து 14,420 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,000 கனஅடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு, 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட இருக்கிறது.

அதேபோல, தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை, 69 அடியை எட்டியுள்ளது.

இதனால், விநாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b