Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
நவீன ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட ரெயில்பெட்டிகளான எல்.எச்.பி. பெட்டிகள் சாதாரண பெட்டிகளை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல உகந்ததாகும். விபத்து காலங்களில் பாதுகாப்பாக கருதப்படும் எல்.எச்.பி. பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காதது மற்றும் அதிவேக ரெயில்களுக்கு உகந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.
எல்.எச்.பி. பெட்டிகள் காச்சிகுடா - நாகர்கோயில் விரைவு ரெயிலில் இணைத்து இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.16354), மற்றும் வரும் டிசம்பர் 13-ந்தேதி காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் ரெயிலில் (16353) வரும் டிசம்பர் 14-ந்தேதி முதலும் இலகுரக பெட்டிகளாக (எல்.எச்.பி. பெட்டிகள்) இணைத்து இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b