Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் திரும்பி வர ஏதுவாக நெல்லையிலிருந்து வரும் 22 ஆம் தேதி சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 22ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில், காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில், வரும் அக். 23ம் தேதி பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். நள்ளிரவு 12.05 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b