Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி. ச.)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறக்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், புயல் வலுப்பெறுவதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தும் வருகின்றது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணிமுதல் வினாடிக்கு 100 கனஅடி நீர் முதல்கட்டமாக திறந்துவிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏரியின் நீர் அளவு 21 அடியை எட்டியுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ