வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மின்துறை மூலம் பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மின்துறை மூலம் பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவுரைகள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது, மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார
Tneb


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மின்துறை மூலம் பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிவுரைகள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது,

மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.

தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.

மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது

Hindusthan Samachar / P YUVARAJ