Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)
கிண்டி ரேஸ் கிளப்பில் பணிகள் மேற்கொள்ள கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்து உத்தரவு பிறப்பித்ததால் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என ரேஸ் கிளப் தரப்பு தெரிவித்தனர்.
பொது நலன் கருதியே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால்
திட்டங்கள் தொடர அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பொதுநலன் கருதி திட்டங்களை மேற்கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
சென்னை ரேஸ் கிளப் இடத்தில் பசுமை பூங்கா, மழை நீர் சேமிப்பு அமைக்கும் திட்டங்களுக்கு எதிராக பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மற்றும் முகமது சபிக் அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ