Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 22 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று 22/10/2025 புதன்கிழமை முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என வனத் துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan