த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அக் 27 ஆம் தேதி அமெரிக்கா பயணம்
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) சென்னை, பல்லாவரத்தில், வரும் 25ம் தேதி, த.மா.கா. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இக்கூட்டத்தில், 1,250 பேர் பங்கேற்க உள்ளதாகவும் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மத்திய அரசை ப
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்க அக் 27 ஆம் தேதி அமெரிக்கா பயணம்


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை, பல்லாவரத்தில், வரும் 25ம் தேதி, த.மா.கா. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இக்கூட்டத்தில், 1,250 பேர் பங்கேற்க உள்ளதாகவும் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மத்திய அரசை பாராட்டியும், மாநில அரசை கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தை முடித்து விட்டு, அன்று இரவு வாசன் புதுடெல்லி புறப்பட்டு செல்கிறார். மறுநாள் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

வரும் 27ம் தேதி, மத்திய அரசின் சார்பில், ஐ.நா., சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேச இந்தியாவிலிருந்து எம்.பி.,க்கள் குழு அமெரிக்கா செல்கிறது. இக்குழுவில் வாசனும் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் நவ., 2ம் தேதி தாயகம் திரும்புகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b