இன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப
இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06166), மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் சிறப்பு ரெயில் (06165) மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு நெல்லை வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM