சேதமடைந்த வைப்பாறு தரைப்பாலத்தை சரி செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம்
விருதுநகர், 22 அக்டோபர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இரவார்பட்டி- அச்சங்குளம் இடையே ஓடும் வைப்பாற்றின் குறுக்கே அவ்விரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் திறக்
சேதமடைந்த வைப்பாறு தரைப்பாலத்தை சரி செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம்


விருதுநகர், 22 அக்டோபர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இரவார்பட்டி- அச்சங்குளம் இடையே ஓடும் வைப்பாற்றின் குறுக்கே அவ்விரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது.

இப்பாலம் திறக்கப்பட்ட 3 மாதங்களில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு பகுதி சேதம் அடைந்தது. அப்போது முதல் தற்போது வரை பாலம் சீரமைக்கப்படவில்லை.

ஆற்றில் சற்று தண்ணீர் குறைந்தால் தரைப்பாலம் வழியாக கிராம மக்கள் சற்று ஆபத்தான நிலையில் நடந்தே ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.

அண்மையில் பெய்த தொடர் மழையால் அணைகள் நிரம்பியுள்ளதால் தற்போதும் வைப்பாறில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இந்த நிலையில் உடைந்த தரைப் பாலத்தை சரி செய்து கொடுக்குமாறு பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இதைக் கண்டித்து அச்சங்குளம் பகுதி பொதுமக்கள் உடைந்த தரைப் பாலத்தில் அமர்ந்தும், வைப்பாற்றில் இறங்கியும் இன்று (அக் 22) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / vidya.b