தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி இன்று வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை கடந்து செல்​லக்​கூடும். இதன் காரண​மாக, சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிப
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி இன்று வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை கடந்து செல்​லக்​கூடும். இதன் காரண​மாக,

சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை

மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்​யக்​கூடும்.

இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது,

தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, தமிழக கடலோரப்

பகு​தி​களுக்கு அப்​பால்

நில​வு​கிறது. இது

காற்​றழுத்த தாழ்வு

மண்​டல​மாக தீவிரமடைய வாய்ப்பு

இல்​லை.

ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாகவே இன்று

(அக்​.23) வடதமிழகம்,

புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை கடந்து செல்​லக்​கூடும்.

தென்​கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நேற்று காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற்று அதே பகு​தி​களில்

நில​வு​கிறது.

இது வடக்​கு, வடமேற்கு திசை​யில் இன்று நகர்ந்து செல்​லக்​கூடும். மேலும், தெற்கு அந்​த​மான் கடல்

மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

நில​வு​கிறது. இதனால்,

தமிழகத்​தில் ஒரு சில

இடங்​களில் இன்று முதல்

27-ம் தேதி வரை இடி,

மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை

பெய்​யக்​கூடும்.

இன்று சென்​னை,

திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சி, ராணிப்​பேட்டை மாவட்​டங்களி​லும், நாளை (அக்​.24) கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டிலும்

புதுச்​சேரி​யிலும் 26, 27-ம் தேதி​களில் சென்​னை,

திரு​வள்​ளூர், காஞ்​சி, செங்​கல்​பட்​டு, கடலூர்,

கள்​ளக்​குறிச்​சி,

திரு​வண்​ணா​மலை, வேலூர், ராணிப்​பேட்​டை, விழுப்​புரம் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யிலும் ஓரிரு

இடங்​களில் கனமழை பெய்யக்கூடும்.

வட, தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​கள்,

புதுச்​சேரி​யில் இன்று மணிக்கு 45-55 கி.மீ.

வேகத்​தி​லும், இடை​யிடையே 65 கி.மீ. வேகத்​தி​லும்,

மன்​னார் வளை​கு​டா, குமரிக்​கடல் பகு​தி​களில் 35-45 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 55 கி.மீ.

வேகத்​தி​லும்

சூறாவளிக் காற்று

வீசக்​கூடும். எனவே,

இப்​பகு​தி​களுக்கு

மீனவர்​கள் செல்ல

வேண்​டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b