காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை அறிவிப்பு
காரைக்கால் , 23 அக்டோபர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக வரும் 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை அறிவிப்பு


காரைக்கால் , 23 அக்டோபர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக வரும் 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை(அக் 24) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று (அக் 22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரியில் இன்று

(அக் 23) அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b