Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாளை
(அக் 24) மருது சகோதரர்களின் 224-வது நினைவு தினம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் பொற்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருப்பத்தூரில் நாளை
(அக் 24) மருது சகோதரர்களின் 224-வது நினைவு தினம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு இன்று (அக் 23) மதியம் முதல் நாளை வரை திருப்பத்தூர் பகுதியில் இயங்கும் எப்.எல்.-2 கிளப், டாஸ்மாக் கடைகள் (மதுபானக்கடை எண்:7571 காரைக்குடி ரோடு, 7740 மின்நகர் சிவகங்கை ரோடு), திருக்கோஷ்டியூர் பகுதியில் இயங்கும் மதுபானக்கடை (மதுபானக்கடை எண்:7747- சோலுடையான்பட்டி, 7573- தென்மாபட்டு), மதகுபட்டி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் (7703- சிவப்பிரகாசம் நகர், மதகுபட்டி, 7705- ஒக்கூர்), சிவகங்கை பகுதியில் இயங்கும் எப்.எல்.-2 கிளப் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7552- திருவள்ளுவர் தெரு, 7556- பிள்ளைவயல் காளியம்மன் தெரு, 7414- ரெயில்வே நிலையம் சிவகங்கை, 7577- ராகினிபட்டி, 7514- அஜீஸ் தெரு), மானாமதுரை பகுதியில் இயங்கும் எப்.எல்.-2 கிளப் டாஸ்மாக் கடைகள் (மதுபானக்கடை எண்:7541 மானாமதுரை நகர், 7544- மானாமதுரை ரெயில்வே நிலையம், 7663- கீழமேல்குடி, 7669- முத்தனேந்தல், 7680- கஞ்சிமடை, 7706- வளநாடு விலக்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை), திருப்பாச்சேத்தி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை (மதுபானக்கடை எண்:7615- பூவந்தி மேலூர் ரோடு) ஆகிய டாஸ்மாக் சில்லரை மதுபான கடைகள் மற்றும் எப்.எல்.-2 கிளப் ஆகியவை முழுவதுமாக மூடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b