குரூப் 1 ஏ தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) குரூப் 1ஏ தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் முதல் வரும் 1ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வ
குரூப் 1ஏ தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

குரூப் 1ஏ தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் முதல் வரும் 1ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏவில் (குரூப் 1ஏ பணிகள்) உள்ள உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சில குறைபாடுகளுடன், சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 23ம் தேதி(இன்று) முதல் வரும் 1ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்தகவல் அத்தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்தேர்வர்கள் மட்டும் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல்/விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b