Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும்.
அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக (டிசம்பர் 22-ந்தேதி) ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று (அக் 23) காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்திய ரயில்வே நிர்வகிக்கும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாகவும், ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு நடைபெற்றது.
முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தென்மாவட்டம் செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரெயில்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆர்.ஏ.சி.க்கு வந்துவிட்டது.
பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதேபோல, டிசம்பர் 23-ந்தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்று
(அக் 24) முன்பதிவு செய்து வருகின்றனர். டிசம்பர் 24-ந்தேதி சொந்த ஊர் செல்பவர்கள் நாளையும் (அக் 25) டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 26-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.
ரயில்களில் ஆர்.ஏ.சி. நிலைமையை கணக்கிட்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவிக்கும் என தெரிகிறது.
Hindusthan Samachar / vidya.b