Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 25 அக்டோபர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் ஜிவிஜி நகர் பகுதியில்
உலகநாதன் என்பவர் பேப்பர் மில் நடத்தி வருகிறார். அதே பகுதியில் ராமாத்தாள் என்ற உறவினர் வீட்டிற்கு வெளியேநேற்று முன்தினம் மாலை ஆம்னி வேனை நிறுத்தியுள்ளார்.
அந்தப் பகுதியில் ஹரிமணி என்பவருடைய நண்பர்களான மதுரையைச் சேர்ந்த கௌதம், முத்துகுமார் உள்ளிட்ட மூன்று நபர்கள் கஞ்சா போதையில் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்து உள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த உலகநாதன் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, ராமாத்தாள் வீட்டின் மீது மீது பெட்ரோல் குண்டு வீசி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது . இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெருக்களில் தகராறு செய்தவர்களை போலீசாரிடம் தகவல் தெரிவித்த குடும்பத்தினர் மீது பட்டப் பகலில்3 நபர்கள் கஞ்சா போதையில் பெட்ரோல் குண்டு வீசியும் கத்தியை வைத்து அலப்பறை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில் மூன்று பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN