Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை சைதாப்பேட்டை அருகே ஏழு வயது சிறுமிக்கு எதிர் வீட்டில் வசிக்கும் 47 வயது நபர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து, சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில்,
சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வெங்கடேசனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ